மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என உயர்கல்வித்துறை வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது. விலக்கு அளிக்கக் கூடாது என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடக்கும் எனவும், ஆன்லைன் வழியில் நடக்குமா, நேரடியாக நடக்குமா என்பதை அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.