தமிழ்நாடு

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பல் : ஒருவர் கைது

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த ஒருவரை, ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
மதுரையில் இருந்து புனலூர் செல்லும் பயணிகள் ரயிலில், ரகசிய தகவல் அடிப்படையில் பாறசாலை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞரிடம் சோதனை நடத்திய போது 2 பேர் தப்பியோடினர். இதனிடையே அந்த இளைஞர், அவரது உடலின் ரகசிய பகுதியில் பதுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த இளைஞர் கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அஜ்மல் என்பதும், தப்பி ஓடியவர்கள் திருவனந்தபுரத்தை சேர்ந்த மாகின் மற்றும் தங்கு எனவும் தெரிய வந்துள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் 3 பேரும் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அஜ்மலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு