தமிழ்நாடு

கன்னியாகுமரி : ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரியில் முன்னாள் ஊராட்சி தலைவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

கன்னியாகுமரியில் முன்னாள் ஊராட்சி தலைவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாளான இன்று திடீரென சீதா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பேச்சிப்பாறை பகுதி ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜன், பாலியல் தொல்லை கொடுப்பதோடு, கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பின்றி அச்சத்தில் வாழ்வதால் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்