தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ3.30 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 3 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கதுறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த கமர் அலி என்பவர் 99 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதே போல் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரியாஸ்கான், இப்ராகீம்ஷா ஆகியோர் 2 கோடியே 4 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 600 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்