தமிழ்நாடு

பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் - பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. மதுக்கடைக்கு எதிரான அப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, அந்த கடையை மூட மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி, கடை மூடப்பட்டதை அறிந்த கிராம மக்கள், மதுபான கடையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டி, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தங்களுடைய மூன்று ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு அவர்கள் நன்றி தொரிவித்துக் கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை