தமிழ்நாடு

தேர்தல் முன்விரோதம் - ஒருவருக்கு அரிவாள் வெட்டு - ஊராட்சி மன்ற தலைவரின் மகன்கள் வெறிச்செயல்

சீர்காழி, காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

தந்தி டிவி
சீர்காழி, காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். தேர்தலின் போது சதீஷ்குமார் என்பவருடன் மணிமாறனுக்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு தடையை மீறி மணிமாறன் கறி விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சதீஷ்குமாரை, மணிமாறனின் 2 மகன்களும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்