ஆங்கிலம் தவிர அனைத்து மொழிகளையும் படிக்கலாம் என மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தெரிவித்துள்ளார். குமரியில் நடைபெற்ற சமய மாநாட்டில் பங்கேற்ற பின்னர் பேசிய மதுரை ஆதினம், மும்மொழி கொள்கை அவசியம் என தெரிவித்தார். மேலும், ஆங்கிலம் அடிமை மொழி, அதனை தவிர ஏனைய மொழிகளை கற்கலாம் என கூறிய அவர், ஆங்கில வழி பள்ளிகளை மூட வேண்டுமென வலியுறுத்தினார்.