பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் படிக்கும் 80 ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் ஷூ வழங்குவதற்கு பதிலாக 1,000 ரூபாய், வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச, தேசிய மற்றும் தெண்மண்டல விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற 320 விளையாட்டு வீரர்களுக்கும் 62 பயிற்சியாளர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த ஆண்டில் பதக்கம் வென்றவர்களுக்கு மட்டும் பரிசு வழங்கப்படுவதாக கூறி சில விளையாட்டு வீரர்கள் முதலமைச்சர் வாகனத்தை முற்றுகையிட்டதால் போலீசாருடன் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.