தமிழ்நாடு

சத்தியமங்கலம் அருகே ஆசிரியரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த அரசுப்பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி

சத்தியமங்கலம் அருகே ஆசிரியரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த அரசுப்பள்ளி மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தந்தி டிவி
சத்தியமங்கலம் அருகே ஆசிரியரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த அரசுப்பள்ளி மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அண்ணாநகர் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மகன் மதியரசு பனையம்பள்ளியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் வகுப்பில் சக மாணவர்களுடன் பேசியதால் ஆசிரியர் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவனுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இதுதொடர்பாக ஆசிரியர் மீது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்