தமிழ்நாடு

ஆகஸ்ட், செப்டம்பரில் பள்ளிகள் துவங்க வாய்ப்பு: 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்டம்பரில் துவங்கும் - 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில் தொடங்கும்

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தந்தி டிவி
வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு தள்ளி போய் இருப்பதால், பள்ளிகள் திறப்பும் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.
10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகள், ஜூலை இறுதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கப்படும் என்றும், 6 முதல் 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு காலையிலும், 9 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பிற்பகலிலும் வகுப்புகள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. 5ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு செப்டம்பர்1 ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?