தமிழ்நாடு

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் : "அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம்"

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வை எழுதலாம் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.

தந்தி டிவி

நாடு முழுவதும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மைய விவகாரத்தில் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர், கல்வித்துறை இயக்குனர் சேதுராமவர்மாவின் முரண்பட்ட அறிவிப்பால், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம் என தொடக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி, சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். வேறு பள்ளிகளுக்கு மாணவர்களை மாற்றக்கூடாது எனவும் அதில் உத்தரவிட்டப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையின் அறிவிப்பால், கடந்த சில நாட்களாக நிலவிவந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

Today Gold Price | சரிந்தது தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்

Nellai NEET Exam | நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய நீட் வினாத்தாள்

Karalam | Sabarimala | சபரிமலை கோயிலில் அதிர்ச்சி.. உறைந்து நின்ற பக்தர்கள்

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்