தமிழ்நாடு

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் : "அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம்"

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வை எழுதலாம் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.

தந்தி டிவி

நாடு முழுவதும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மைய விவகாரத்தில் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர், கல்வித்துறை இயக்குனர் சேதுராமவர்மாவின் முரண்பட்ட அறிவிப்பால், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம் என தொடக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி, சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். வேறு பள்ளிகளுக்கு மாணவர்களை மாற்றக்கூடாது எனவும் அதில் உத்தரவிட்டப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையின் அறிவிப்பால், கடந்த சில நாட்களாக நிலவிவந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"