தமிழ்நாடு

சுடுகாட்டில் எரியூட்டத் தயாரான பள்ளி மாணவரின் உடலை மீட்ட போலீஸ்

தந்தி டிவி

சுடுகாட்டில் எரியூட்ட தயாராக பள்ளி மாணவரின் உடலை, போலீசார் கைப்பற்றி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

சங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரி ஜீவா நகரில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இங்கு வசிக்கும் முனீஸ்வரன் - காளியம்மாள் தம்பதியின் 2-வது மகன் கார்த்திக் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 15 வயதே ஆன கார்த்திக் காய்ச்சலால் சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் விட்டிலேயே இருந்து வந்ததாக தெரியவருகிறது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கூறாமல், கார்த்திக்கின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை எரியூட்டுவதற்காக சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்..

உடனடியாக, இது தொடர்பாக தகவல் அறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் போலீசார், கார்த்திக்கின் உடலில் நெருப்பு மூட்ட தயாராக இருந்த நிலையில், கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவரின் இறப்பு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்