தமிழ்நாடு

எஸ்.சி. எஸ்டி நலத்திட்டம் குறித்து ஆய்வு - இறையன்பு, அருண் ஹல்தார் பங்கேற்பு

எஸ்.சி. எஸ்டி நலத்திட்டம் குறித்து ஆய்வு - இறையன்பு, அருண் ஹல்தார் பங்கேற்பு

தந்தி டிவி

எஸ்.சி. எஸ்டி நலத்திட்டம் குறித்து ஆய்வு - இறையன்பு, அருண் ஹல்தார் பங்கேற்பு

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக அரசு மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்தார், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஹல்தார், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள 3 ஆயிரம் அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு