தமிழ்நாடு

எஸ்.சி. எஸ்டி நலத்திட்டம் குறித்து ஆய்வு - இறையன்பு, அருண் ஹல்தார் பங்கேற்பு

எஸ்.சி. எஸ்டி நலத்திட்டம் குறித்து ஆய்வு - இறையன்பு, அருண் ஹல்தார் பங்கேற்பு

தந்தி டிவி

எஸ்.சி. எஸ்டி நலத்திட்டம் குறித்து ஆய்வு - இறையன்பு, அருண் ஹல்தார் பங்கேற்பு

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக அரசு மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்தார், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஹல்தார், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள 3 ஆயிரம் அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு