தமிழ்நாடு

"தண்ணியை சேமிச்சு வச்சுக்கோங்க" - சென்னை மக்களுக்கு ஷாக் நியூஸ்.."வரும் 30 - ம் தேதி முதல்"

தந்தி டிவி

வரும் 30 -ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம், நிலத்தடியில் இருந்து தண்ணீர் எடுக்க முறையான அனுமதி வழங்க கோரி வருகிற புதன்கிழமை 30- ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் ஓடாது என அவர் கூறினார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்