தமிழ்நாடு

வேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை : பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணையில் 102 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்க முடியும் என்பதால், எந்த நேரத்திலும் நீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே, பவானி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு ஆட்சியர் கதிரவன் உத்தரவின்பேரில், வெள்ளியம் பாளையம் புதூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்டோரா மூலமாக வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். பவானியில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ