தமிழ்நாடு

வேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை : பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணையில் 102 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்க முடியும் என்பதால், எந்த நேரத்திலும் நீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே, பவானி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு ஆட்சியர் கதிரவன் உத்தரவின்பேரில், வெள்ளியம் பாளையம் புதூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்டோரா மூலமாக வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். பவானியில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி