தமிழ்நாடு

சத்தியமங்கலம் எல்லையில் போலீசார் சோதனை - இ-பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எல்லையில், இ-பாஸ் இல்லாமல் நுழைந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எல்லையில், இ-பாஸ் இல்லாமல் நுழைந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இம்மாதம் 30 ஆம் தேதி வரை மாவட்டம் தாண்டி நுழைய செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தந்த மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் பெரிய கள்ளிப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இ- பாஸ் இல்லாமல் வரும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை திருப்பி அனுப்பினர். உரிய அனுமதியுடன் வருமாறு அவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை