தமிழ்நாடு

சத்தியமங்கலம் : குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, வரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக அந்த கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் குடிநீர் தேடி விவசாய தோட்டங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, புஞ்சைபுளியம்பட்டி - நம்பியூர் சாலையில் காலி குடங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் காரணமாக அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு