தமிழ்நாடு

சத்தியமங்கலம் : குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, வரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக அந்த கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் குடிநீர் தேடி விவசாய தோட்டங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, புஞ்சைபுளியம்பட்டி - நம்பியூர் சாலையில் காலி குடங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் காரணமாக அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்