தமிழ்நாடு

யானைக்கூட்டம் சேர்க்காததால் சாலையில் சுற்றித்திரிந்த குட்டி யானை

சத்தியமங்கலம் அருகே தாயை பிரிந்த யானை குட்டியை, மீண்டும் யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

தந்தி டிவி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில், சில நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து வெளியேறிய பெண் யானை குட்டியை, வனத்துறையினர் மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். ஆனால், யானைக்கூட்டம் சேர்த்து கொள்ளாததால் அந்த யானைகுட்டி மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனச்சாலையில் சோகத்துடன் சுற்றித்திரிந்தது. இதனையடுத்து, யானைகுட்டியை மீட்டு காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டுசென்ற வனத்துறையினர், அதற்கு நாள்தோறும் 15 லிட்டர் லேக்டோஜென் பால் கொடுத்து பராமரித்து வந்தனர்.

இதனிடையே, இன்று வனத்துறையினர், குட்டியானையை வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுசென்று யானைக்கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். யானைக்கூட்டம் மீண்டும் சேர்க்காவிட்டால், குட்டியானை வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு செல்லப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்