தமிழ்நாடு

லாரிகளில் கரும்பு தேடிய யானை - விரட்டியடித்த லாரி ஓட்டுநர்கள்

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் சாலையோரம் நின்றிருந்த லாரிகளில் கரும்பு உள்ளதா என ஒற்றை யானை லாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் சாலையோரம் நின்றிருந்த லாரிகளில் கரும்பு உள்ளதா என ஒற்றை யானை லாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திம்பம் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நீண்ட வரிசையில் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் நின்றிருந்தன. அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை, லாரிகளில் கரும்பு உள்ளதா என தேடிப் பார்த்தது. யானை நடமாட்டத்தை கண்டு லாரி ஓட்டுனர்கள் அச்சமடைந்தனர். லாரி ஓட்டுநர்கள் அனைவரும் சேர்ந்து யானையை சத்தம் போட்டு சுமார் அரை மணி நேரம் போராடி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்