தமிழ்நாடு

மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்திய யானைகள் - அறுவடை சமயத்தில் யானைகள் அட்டகாசம்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அருகே மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அருகே மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்தி உள்ளது. பாபு என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளப் பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகளும், வனத்துறையினரும் இணைந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்டியடித்தனர். இதனிடையே, தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தோட்டங்களில், யானைகள் அடிக்கடி நுழைவதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்