தமிழ்நாடு

கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு : விளைநிலங்களுக்கு புகுந்த தண்ணீர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மில் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மில் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ள 2300 கனஅடி தண்ணீர் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்தது. இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் மில்மேடு, கேத்தம்பாளையம் பகுதிகளில் உள்ள 50 வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்