தமிழ்நாடு

கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு : விளைநிலங்களுக்கு புகுந்த தண்ணீர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மில் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மில் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ள 2300 கனஅடி தண்ணீர் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்தது. இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் மில்மேடு, கேத்தம்பாளையம் பகுதிகளில் உள்ள 50 வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை