சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகளை கண்காணிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விலங்குகள் விளை நிலங்கள், வீடுகளை சேதப்படுத்துவதும், பொதுமக்களை அச்சுறுத்துவதும், வாடிக்கையாக இருந்து வந்தன. அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக, சத்தியமங்கலம் வனப்பகுதியை சுற்றிலும், 15 இடங்களில், லேசர் சென்சார் சிக்னல் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் வன விலங்குகள் அந்த பகுதிகளில் வழியாக காட்டை விட்டு வெளியேறும் போது, செல்போனில் குறுந்தகவல் கிடைக்கும் என வனத்துறை கூறியுள்ளது.