மரண தண்டனை பெற்ற சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்த பென்னிக்ஸ் சகோதரி
சாத்தான்குளம் குற்றவாளிகள் மேல்முறையீடு சென்றாலும் போராடுவோம் என பென்னிக்ஸ் சகோதரி அறிவிப்பு சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கின் தீர்ப்பை குடும்பத்தினர் வரவேற்றனர். குற்றவாளிகள் மேல்முறையீடு சென்று விட்டாலும், அவர்கள் தொடர்ந்தும் போராடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பென்னிக்சின் சகோதரி பெர்சி, இந்த தீர்ப்பு பொதுமக்களுக்கும் முக்கியமானதாகும் என கூறினார். மேலும், குற்றவாளிகள் மேல்முறையீடு சென்றாலும் தாங்களும் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், கடைசி மூச்சுவரை நீதிக்காக போராடுவோம் என்றும் உறுதியளித்தார்,