தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு : எஸ்.ஐ. ரகுகணேஷ் ஜாமீன் கோரி மனு தாக்கல் - ஜாமீன் வழங்க சி.பி.ஐ. வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

தந்தி டிவி

சாத்தான் குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். விசாரணையின் போது ஆஜரான சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ரகு கணேஷூக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தி கலைக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார். தந்தை - மகனை காவல்துறை அடித்து சித்ரவதை செய்த விவகாரத்தில் ரகு கணேஷ் சம்பந்தபட்டிருப்பது தொடர்பான சாட்சிகள், ஆவணங்கள் சிபிஐ வசம் உள்ளதாக அவர் கூறினார். சிபிஐI பதில் அறிக்கை தாக்கல் செய்து இறுதி வாதம் வைக்க கால அவகாசம் வேண்டும் என வழக்கறிஞர் கேட்டதையடுத்து நீதிபதிவி சாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’