தமிழ்நாடு

சாத்தான்குளம் காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர் முருகனின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தந்தி டிவி

சாத்தான்குளம் வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை நீதிபதி தாண்டவன் விசாரித்தார். அப்போது காவலர் முருகன் மற்றும் சிபிஐ தரப்பில் காணொலி காட்சி வாயிலாக வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர். வழக்கு தொடக்க நிலை விசாரணையில் இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்த சிபிஐ முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் காவலர்கள் முத்துராஜா, தாமஸ் பிரான்ஸிஸ் ஆகிய 2 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது,.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை