தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜை விளாத்திகுளம் அருகே போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து 15-நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவான காவலர் முத்துராஜை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் விளாத்திகுளம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான அரசன்குளத்தில் முத்துராஜை போலீசார் கைது செய்தனர். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழ மங்கலம் கிராமத்தில் காட்டுப் பகுதியில் இருந்த முத்துராஜின் இருசக்கர வாகனத்தை தனிப்படை போலீசார் கைப்பற்றி பசுவந்தனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை போலீசார், தூத்துக்குடி அழைத்து சென்று சிபிசிஜடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முத்துராஜிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை