தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவத்தில் 2ஆம் நாளாக சிபிஐ விசாரணை - விஜய்குமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு கள ஆய்வு

சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் 2ஆம் நாளாக இன்று உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சாத்தான்குளம் சம்பவத்தில் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சிபிஐ குழு நேற்று தமிழகம் வந்தது. இதனிடையே ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 பேர் கொண்ட சிபிஐ குழு சாத்தான்குளத்தில் கள ஆய்வு நடத்தி விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவத்தில் முதலில் இருந்து அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்ட இந்த குழு, உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றது. அதன்படி ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். சாட்சியங்கள் மற்றும் விசாரணைக்கு தேவையன நபர்கள் குறித்த தகவல் பெறும் பணியையும் சிபிஐ துரிதபடுத்தியுள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’