தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவத்தில் 2ஆம் நாளாக சிபிஐ விசாரணை - விஜய்குமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு கள ஆய்வு

சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் 2ஆம் நாளாக இன்று உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சாத்தான்குளம் சம்பவத்தில் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சிபிஐ குழு நேற்று தமிழகம் வந்தது. இதனிடையே ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 பேர் கொண்ட சிபிஐ குழு சாத்தான்குளத்தில் கள ஆய்வு நடத்தி விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவத்தில் முதலில் இருந்து அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்ட இந்த குழு, உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றது. அதன்படி ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். சாட்சியங்கள் மற்றும் விசாரணைக்கு தேவையன நபர்கள் குறித்த தகவல் பெறும் பணியையும் சிபிஐ துரிதபடுத்தியுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு