தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவத்தில் 2ஆம் நாளாக சிபிஐ விசாரணை - விஜய்குமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு கள ஆய்வு

சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் 2ஆம் நாளாக இன்று உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சாத்தான்குளம் சம்பவத்தில் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சிபிஐ குழு நேற்று தமிழகம் வந்தது. இதனிடையே ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 பேர் கொண்ட சிபிஐ குழு சாத்தான்குளத்தில் கள ஆய்வு நடத்தி விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவத்தில் முதலில் இருந்து அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்ட இந்த குழு, உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றது. அதன்படி ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். சாட்சியங்கள் மற்றும் விசாரணைக்கு தேவையன நபர்கள் குறித்த தகவல் பெறும் பணியையும் சிபிஐ துரிதபடுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்