தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் குறுக்கு விசாரணை

மதுரையில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரையில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை , மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் ஆகிய இருவரும் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த ரவிச்சந்திரனிடம் , ஆய்வாளர் ஸ்ரீதர் நேரடியாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட 3 காவலர்களின் தரப்பு வழக்கறிஞர்களும் குறுக்கு விசாரணை செய்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை