தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் குறுக்கு விசாரணை

மதுரையில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரையில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை , மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் ஆகிய இருவரும் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த ரவிச்சந்திரனிடம் , ஆய்வாளர் ஸ்ரீதர் நேரடியாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட 3 காவலர்களின் தரப்பு வழக்கறிஞர்களும் குறுக்கு விசாரணை செய்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி