தமிழ்நாடு

"செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றாக உள்ளது" - தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தகவல்

சர்கார் படத்தின் கதையும், செங்கோல் படத்தின் கதையும் ஒன்றுதான் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் கதை தன்னுடையது என ராஜேந்திரன் என்ற உதவி இயக்குனர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே, கதை சர்ச்சை தொடர்பாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ராஜேந்திரன் முறையிட்டுள்ளார். அது தொடர்பாக ராஜேந்திரனுக்கு அனுப்பப்பட்ட கடிதம் வெளியாகியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு செங்கோல் என்ற தலைப்பில் ராஜேந்திரன் பதிவு செய்து வைத்துள்ள கதையும், சர்கார் படத்தின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த சர்ச்சையில் தங்களால் உதவ முடியாது என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள நிலையில், கதை சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"