நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற
சரஸ்வதி அம்மன் கோவிலில், இன்று சிறப்பு பூஜைகளுடன் சரஸ்வதி பூஜை நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு சரஸ்வதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்துருளிய சரஸ்வதி அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் எழுதுகோல் வழங்கப்பட்டது.