சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. சங்கரநாராயணர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, தங்கச் சப்பரத்தில் தவமிருந்த கோமதி அம்மனுக்கு காட்சி அளித்ததை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்