தமிழ்நாடு

Sankarankoil | கோயிலில் தேங்கிய மழை நீரில் நடந்து சென்று அமைச்சர் மூர்த்தி சாமி தரிசனம்

தந்தி டிவி

சங்கரன்கோவிலில் பலத்த மழை பெய்த நிலையில், கோவிலில் தேங்கிய மழை நீரில் குடும்பத்தினருடன் நடந்து சென்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சாமி தரிசனம் செய்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் மழை நீர் புகுந்தது. இந்நிலையில் வருஷாபிஷேக பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் மூர்த்தி, கோவிலில் அடிக்கடி மழை நீர் புகுந்து வருவது குறித்து அதிகாரிகளை எச்சரித்தார். மேலும் இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்