தமிழ்நாடு

அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், மத்தியஸ்தர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்

பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் மத்தியஸ்தர் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், மத்தியஸ்தர் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார். தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயங்கள் மற்றும் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் முன் உருவாகி வரும் சவால்கள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், வெற்றி - தோல்வி, லாபம் - நஷ்டம் உள்ளிட்டவை தொழிலில் உண்டு எனவும், கடன் பிரச்னைகளுக்காக புதிய திவால் சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கட்ட பஞ்சாயத்து போன்ற சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் அரங்கேறும் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்