கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் ஒரே கல்லில் அமைந்துள்ள நவகிரக பீடத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனிபகவானை பக்தியுடன் வழிபட்டனர்.