தமிழ்நாடு

மணல் கடத்தல் வழக்கு - குண்டர் சட்ட நடவடிக்கை சுற்றறிக்கையை வெளியிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பான சுற்றறிக்கையை 2 வாரத்திற்குள் வெளியிட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

தந்தி டிவி

* மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பான சுற்றறிக்கையை 2 வாரத்திற்குள் வெளியிட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

* மணல் கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஸ்.எம்.சுப்ரமணியம், ராமதிலகம் அடங்கிய அமர்வு, அக்டோபர் 3ஆம் தேதிக்குள் சுற்றறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தது.

* அப்போது, மாநில குற்றவியல் அரசு வழக்கறிஞர், இது சம்பந்தமாக வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

* ஏற்கனவே சட்டத்தில் உள்ள விதியை அமல்படுத்த இவ்வளவு நீண்ட நடை முறை தேவையா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களை தண்டிக்காமல் இருக்க முடியாது எனக் கூறினர்.

* மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்