தமிழ்நாடு

மணல் அள்ளுதல் குறித்து சர்ச்சை பேச்சு : செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு

கரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
கரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சில தினங்களுக்கு முன், தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய செந்தில் பாலாஜி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மாட்டு வண்டி உரிமையாளர்கள், ஆற்று மணல் அள்ளலாம் என்றும், அதை தடுக்கும் அரசு அதிகாரிகள் பதவியில் இருக்க முடியாது என்றும் பேசியதாக சர்ச்சை எழுந்த‌து. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் நகர காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜி மீது, வன்முறையை தூண்டுதல், பொதுப் பணியாளர்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Gold Price | Union Budget | "தங்கம் விலை.. இனி இப்படி தான்..." - பரபரப்பை கிளப்பிய பாஜக சரவணபிரபு

Chennai | Union Budget | "மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு" - சென்னையில் முக்கியப்புள்ளி ஓபன் டாக்

Union Budget 2026 Explain Tamil | ``பட்ஜெட்டில் அறிவித்ததும் திடீர் சரிவு ஏன்?’’

DMK | Union Budget | TN Govt | "தங்கம் பத்தி பேசவே இல்லையே.." - திமுகவில் இருந்து வந்த REACTION

Union Budget 2026 Tamil | ``கோவை, திருப்பூருக்கு குட் நியூஸ்’’ - மத்திய பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு