சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 50 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில் 250 மாணவர்கள் படித்து வரும் நிலையில் 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மழைக்காலத்துக்கு முன்பு பள்ளிக் கட்டடத்தை புதுப்பித்து தரவேண்டும் என அரசுக்கு அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.