தமிழ்நாடு

குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் : காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம் கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம் கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் போடப்பட்ட மின் மோட்டார்களை சிலர் திருடி சென்று விட்டதாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் இளம்பிள்ளை பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்