தமிழ்நாடு

குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் : காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம் கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம் கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் போடப்பட்ட மின் மோட்டார்களை சிலர் திருடி சென்று விட்டதாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் இளம்பிள்ளை பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்