தமிழ்நாடு

குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் : காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம் கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம் கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் போடப்பட்ட மின் மோட்டார்களை சிலர் திருடி சென்று விட்டதாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் இளம்பிள்ளை பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி