மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் ஓமலூர் பகுதியில்1,500க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில்1,500க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை விதிகளுக்கு உட்பட்டு சரக்கு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்க கூடாது என வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் சேலத்தில் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது..