தமிழ்நாடு

5 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் : சிலைகள் பறிமுதல் - கடத்தியவர் கைது

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. கெங்கவல்லி பகுதியில் ஐம்பொன் சிலை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் பிரிவு டிஎஸ்பி ராஜாராம் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு ராஜசேகர் என்பவரின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது அவர் ஒன்றரை அடி உயரம் கொண்ட ஆறரை கிலோ எடையிலான பஞ்சேலாக அம்மன் சிலை ஒன்றை கடத்தி பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்த அந்த ஐம்பொன் சிலை 5 கோடி ரூபாய் மதிப்பிலானது என்றும், அந்த சிலையை விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சிலையை பறிமுதல் செய்த போலீசார், சிலை கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜாராமை கைது செய்தனர்..மேலும் இந்த சிலை கடத்தல் சம்பவத்தில் வேறு யார் யார் தொடர்பில் உள்ளார்கள் என்பது குறித்து சிலை கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு