தமிழ்நாடு

பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த நபர் : 4 மாத கரு கலைப்பு - காதலன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

பள்ளி மாணவியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கருக்கலைப்பு செய்ததாக காதலன் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகளுக்கு 17 வயதாகும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியை ராஜா பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதில் அவர் 4 மாதம் கருவுற்றார். இதையடுத்து மாணவிக்கு 17 வயது என்பதால் திருமண முயற்சிகளும் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ராஜாவின் தாய் லட்சுமி, தாய் மாமன் ராமர் உள்ளிட்ட 5 பேர் மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய காதலன் ராஜா உள்ளிட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி