தமிழ்நாடு

முதியவர்களை குறிவைத்து தாக்கும் சைக்கோ கொலையாளி - சந்தேகத்தின் பேரில் 100 பேரை பிடித்து விசாரணை

சேலத்தில் முதியவர்களை குறிவைத்து தாக்கும் சைக்கோ கொலையாளி விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் 100 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சேலம் காசகாரனூரில் சாலையின் ஓரம் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு அடுத்த நாளும் பழைய பேருந்து நிலையம் அருகே தூ​ங்கிக் கொண்டிருந்த அங்கமுத்து என்ற முதியவர் அதேமுறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை கொண்டு வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சந்தேகத்திற்கிடமான 100 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்