தமிழ்நாடு

முதியவர்களை குறிவைத்து தாக்கும் சைக்கோ கொலையாளி - சந்தேகத்தின் பேரில் 100 பேரை பிடித்து விசாரணை

சேலத்தில் முதியவர்களை குறிவைத்து தாக்கும் சைக்கோ கொலையாளி விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் 100 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சேலம் காசகாரனூரில் சாலையின் ஓரம் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு அடுத்த நாளும் பழைய பேருந்து நிலையம் அருகே தூ​ங்கிக் கொண்டிருந்த அங்கமுத்து என்ற முதியவர் அதேமுறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை கொண்டு வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சந்தேகத்திற்கிடமான 100 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்