தமிழ்நாடு

பெண்ணை கன்னத்தில், அறைந்த காவல் ஆய்வாளர் - அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை, காவல் ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை, காவல் ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சூர்யா என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து, கொலையாளிகளை கைதுசெய்யக் கோரி, சேலம் அரசு மருத்துவமனை முன்பு, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களை வலுக்கட்டயமாக அப்புறப்படுத்திய காவல் ஆய்வாளர் குமார், பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு