சேலம் மாவட்டம் ஒமலூர் அருகே பழுதடைந்த கழிப்பறை கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தொளசம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்திற்குள் வெளி நபர்கள் யாரும் நுழையாத வகையில் சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர். இதனிடையே பொதுப்பணித்துறை அனுமதி கிடைத்தவுடன் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.