தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற முயற்சி - இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தால் பரபரப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இஸ்லாமியர்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றக்கோரி, சேலம் கோட்டை மைதானத்தில் கடந்த 24 நாட்களாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், இஸ்லாமிய அமைப்பினர் ஏராளமானோர், பாத்திரங்கள், பாய், தலையனை உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக எடுத்து கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதை தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?