தமிழ்நாடு

அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்கம் - மொத்த மின் உற்பத்தி 1,440 மெகா வாட் ஆனது

சேலம் மாவட்டம் மேட்டூரில் கொரோனா தடை காரணமாக நிறுத்தப்பட்ட புதிய 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம், மேட்டூரில் கொரோனா தடை காரணமாக நிறுத்தப்பட்ட புதிய 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப் பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மின் தேவை குறைந்ததன் காரணமாக 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் நான்காவது அலகு தவிர மற்றவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதே போல் புதிய 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டன. இதனைத் தொடர்ந்து மேட்டூரில் பழைய மற்றும் புதிய அனல் மின் நிலையங்களில் இன்று முதல் அதன் மொத்த மின் உற்பத்தியான ஆயிரத்து 440 மெகாவாட் எடுக்கப்படுகிறது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை