ஆசனவாயில் காற்று செலுத்திய இளைஞர் - வீங்கிய வயிறு
சேலத்தில் இளைஞர் ஒருவர் விளையாட்டாக செய்த காரியம் ஒன்று, அவருக்கே விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் சுசான்தாஸ், அம்மாப்பேட்டையில் உள்ள தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தபோது, ஏர் டியூப்பை விளையாட்டுத்தனமாக ஆசனவாயில் சொருகி காற்று செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அவரது வயிறு கடுமையாக வீங்கியதால், சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடலுக்குள் புகுந்த காற்று சிகிச்சை மூலம் வெளியேற்றப்பட்டது.