தமிழ்நாடு

சிறுநீரகம் செயலிழந்த மகன் - இடுப்பில் சுமந்து வந்த பெற்றோர் ஆட்சியரிடம் மனு

சேலத்தில் சிறுநீரகம் செயலிழந்த மகனை இடுப்பில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெற்றோர் உதவி கேட்டு மனு அளித்தனர்.

தந்தி டிவி

சேலத்தில் சிறுநீரகம் செயலிழந்த மகனை இடுப்பில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெற்றோர் உதவி கேட்டு மனு அளித்தனர்.

சேலம் மகுடஞ்சாவடியை அடுத்த பட்டச்சாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. அவரது 19 வயது மகன் பாபுவுக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயலிழந்து விட்டன. இதனால் உடல் மெலிந்து நடக்க முடியாமல் அவதிப்படும் பாபுவை இடுப்பில் சுமந்து கொண்டு பெற்றோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

கூலி வேலை செய்யும் தன்னால் மகனின் சிறுநீரக சிகிச்சைக்கான செலவை சமாளிக்க முடியவில்லை என்று கூறிய பாபுவின் தந்தை, மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு