தமிழ்நாடு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாணவனை பிரம்பால் அடித்ததாக ஆசிரியர் மீது புகார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவன் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவன் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் யோகேஸ்வரன் செங்கோடனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 4- ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் பலகையில் மாணவன் சரியாக எழுதவில்லை என கூறி ஆங்கில ஆசிரியர் வெங்கடேஷ் மாணவனை பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு