தமிழ்நாடு

அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து ஸ்டாலின் அரண்டு போய் உள்ளார் - பழனிசாமி

அதிமுக கூட்டணியை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் அரண்டு போய் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் பாமக நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்கட்சிகள் சதி செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் பால் கெட்டு விடும். அதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருந்து முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார். அதிமுக கூட்டணியை கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அரண்டு போய் உள்ளதாகவும், இக்கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு